தி.நகர்:
லக்ஷ்யம் கல்வி குழுமத்தின் சார்பில் நவராத்திரி விழாவை முன்னிட்டு விஜயதசமி தினத்தில் அக்ஷராப்யாசம், ஆச்சார்ய குரு வந்தனம் மற்றும் ஆசிரியர் விருது வழங்கும் முப்பெரும் விழா இதன் நிறுவனர் பேராசிரியர்.டாக்டர். எம்.ரஜினி அவர்கள் தலைமையில் தியாகராயநகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி இன்போசிஸ் அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது.

இந்த முப்பெரும் விழாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எச்.வி.ஹண்டே, நீதிபதி ஆறுமுகம், டாக்டர் கவுரி அசோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.‌

மேலும் இந்நிகழ்வில் வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனத்தலைவர் இளைய கட்டபொம்மன், ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பிரேமலதா,
பாஜக நிர்வாகி விருகை வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

AL4S அறக்கட்டளை நிறுவனர் சூர்ய நாராயணன் மற்றும் லக்ஷ்யம் கல்வி குழுமத்தின் நிறுவனர் ரஜினி ஆகியோர் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் டாக்டர் பேராசிரியர் ரஜினி அவர்கள் பேசுகையில், மாணவர்கள் நன்றியுணர்வு மற்றும் மன்னிப்பு, உணவின் முக்கியத்துவம் பற்றியும் அதிக மதிப்பெண்கள் பெற உணவு எப்படி உதவுகிறது, என்று பேசினார். புத்தகங்களைத் தாண்டிய வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம், நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல வாழ்க்கைத் திறன்கள் உள்ளன. நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களாலும். நாம் அந்த அறிவைப் புதுப்பிக்கவில்லை என்றால், காலாவதி தேதியுடன் குறிக்கப்படுவோம். அறிவுதான் சக்தி, கல்விதான் அடுத்த தலைமுறையின் அடையாளம். ஒவ்வொரு பள்ளியும் முதல் முறையாக பள்ளிக்குள் நுழையும் குழந்தைகளுக்கு இந்த பாரம்பரிய அக்ஷராபியசத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆச்சார்ய குரு வந்தனம் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உரையாடல் அவர்களுடன் உண்மையான பிணைப்பை ஏற்படுத்தியதுடன், உரிய மரியாதை மற்றும் ஆசீர்வாதங்களும் இந்த நிகழ்ச்சியுடன் பரிமாறப்பட்டன. லஷ்யம் கல்வி குழுமத்தின் நிறுவனர் ரஜினி அவர்களால் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் பேனா மற்றும் விஜயதசமி பரிசுகள் மற்றும் பங்கேற்புச் சான்றிதழ்களும், ஆசிரியர்களுக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் மேடையில் சிறப்பு விருந்தினர் களால் வழங்கப்பட்டன.

மேலும் டாக்டர் ஹெச்.வி.ஹண்டே அவர்கள் பேசுகையில், லட்சியம் மற்றும் கல்வி ஜாம்பவான் டாக்டர் ரஜினி அவர்களின் தன்னலமற்ற முயற்சியை அனைவரும் வணங்க வேண்டும், அவர் உண்மையான குரு என்றும், மாணவர்கள் அர்ப்பணிப்புடன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். அறியாமை இருளைப் போக்கும் சரஸ்வதி தேவியின் தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கான அர்த்தமுள்ள நோக்கமாக இந்தக் விழா அமைந்தது என கூறினார்.

இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.