ஈரோடு :ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் ஈரோடு மாவட்ட சங்க ஆலோசனை கூட்டம் பி. சுமியாத்தா அவர்கள் தலைமையிலும், ம. மீனா அவர்கள் முன்னிலையிலும் ஈரோட்டில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில். மாநில தலைவர். மனித நேயர் முனைவர் நா. சு. செல்வராஜ் மற்றும் எஸ். செல்வி ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்த கூட்டத்தில் பல்நோக்கு மருத்துவமனை யாளர்கள் பணிமாற்றம் தகுதியானவர்களுக்கே வழங்கப்பட வேண்டும், ஏனைய ஆர். சி. ஹெச். தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். ஊதிய உயர்வு மற்றும் பணிமாற்றம் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியில் சி. சின்னான் அவர்கள் நன்றியுரை நல்கினார்.