சென்னை : ஜூன், 07
சென்னையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் நீதி மய்யம் நிறுவனர் டாக்டர்.கமலஹாசன் அவர்களின் நாமே தீர்வு என்ற திட்டத்தின் மூலம் சைதை கிழக்கு பகுதி சார்பாக 172 வது வட்டத்தில் கோட்டூர்புரம் இந்திரா காமராஜ் மார்க்கெட் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சேனிடைசர் இயந்திரம் வைக்கப்பட்டது. அதை தொடந்து அனைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.

சைதை மற்றும் வேளச்சேரி
மாவட்ட செயலாளர் ஆர்.பெருமாள் மற்றும் சைதை கிழக்கு நகர செயலாளர் கோட்டூர்புரம் வே.ம. அருண் அவர்கள் தலைமையில்,
மேற்கு நகர செயலாளர் விஜயகுமார் மற்றும் வட்டச் செயலாளர் ராஜன்,கிளைச் செயலாளர் கோகுல கிருஷ்ணன்மற்றும் சைதை 172 வது வட்ட நிர்வாகிகள் விஜயகுமார், ரவீந்திரன், சுப்பு,நவீன், அப்துல்லா, சேர்ம ராஜன், ஹரிஹரன், மனோஜ் பாலாஜி பிரசாந்த் ஆகியோர்களின் முன்னிலையில், கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் சிறு கடை வியாபாரிகள் சங்க தலைவர் மைக்கேல் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
