நாஸ்காம் மற்றும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்
இணைந்து வழங்கும் கொரோனா நிவாரண உதவி

சென்னை : மே, 19

கொரோனா வைரஸ் பாதிப்பால் நாட்டில் நிலவும் ஊரடங்கை கருத்தில் கொண்டு நாஸ்காம் அசோசியேஷன் மற்றும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் இணைந்து சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வாழும் ஏழை, எளியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது.

ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இதுவரை பல ஆயிரக்கணக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த நிவாரணப் பொருட்களில் அரிசி, கோதுமை மாவு, துவரம் பருப்பு, உப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கும்.

இந்த முயற்சியால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். மேலும் ரூ.65 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசிப் பொருள்கள் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.