கிரிப்டோ கரன்சி மூலம் அதிகம் லாபம் பெற்று தருவேன் என்று கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மற்றும் டி.ஜி.பி அவர்களிடமும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அருண்குமார் கோரிக்கை

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அருண்குமார் என்பவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கிரிப்டோ கரன்சி கிரிப்டோ கரன்சி மூலம் அதிகம் லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறி நந்தகுமார் மற்றும் அவரது நண்பர்களான சங்கர், பிரகாஷ், சீனிவாசன் ஆகியோர் ஆசை வார்த்தைகளை கூறி தன்னுடைய சொந்த அலுவலகத்தில், யூனிவர் காயின் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பல மடங்கு லாபங்களை சம்பாதித்து அதிலிருந்து நிறைய முதலீட்டாளர்களிடமிருந்து பண த்தையும் பெற்று தற்போது அந்த நிறுவனத்திலிருந்து இந்த நான்கு பேரும் தன்னை ஏமாற்றியதாகவும், இதனால் முதலீடு முதலீடு செய்தவர்கள் முழு பணத்தை கொடுக்குமாறும் வற்புறுத்தி வருவதாகவும். தனக்கு வரவேண்டிய பங்கு இதுவரையும் கொடுக்கவில்லை என்றும், அவர்கள் எனக்கு தரவேண்டிய முழு தொகையும் அந்த நான்கு பேரிடமிருந்து பெற்றுத் தரக்கோரி டி.ஜி.பி டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருப்பதாகவும், முதலமைச்சரின் நேரடி தொலைபேசி எண்ணிற்கும் இது குறித்து புகார் தெரிவித்துள்ளதாகவும் முதலமைச்சர் மற்றும் டி.ஜி.பி சைலேந்திர பாபு அவர்களிடமும் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

மேலும் அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கிரிப்டோ கரன்சி மூலம் முதலீடு செய்யும் முன் அனுபவம் உள்ளவர்களை பலமுறை கேட்டு அதன்பின் முதலீடுகளை தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.