தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கான அமைச்சர் மாண்புமிகு திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை சென்னை பசுமைவழி சாலையிலுள்ள முகாம் அலுவலகத்தில் விளையாட்டு மற்றும் சைக்கிள் ஓட்டுதல் உலக சாம்பியன் முனைவர் மா. ரா.சௌந்தரராஜன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து அரசு பள்ளி மாணவ, மாணவிகள் உயரிய லட்சியத்தை அடையும் நோக்கத்துடன் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் அவர் எழுதிய நில், கவனி, யோசி, செயல்படு என்கிற புத்தகத்தை கொடுத்து வாழ்த்துப்பெற்றார்.
