மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு சார்பில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னி்ட்டு சூளை, டி.கே தெருவில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு
தலைவர் பா.சந்திரசேகர் தலைமையில் கலைப்பிரிவின் மாநில செயலாளர் சூளை ராஜேந்திரன் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் காமராஜரின் முகமூடி அணிந்து அவரது சிலைக்கு பால் அபிஷேகம் செய்தும் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர்கள் என். ரங்கபாஷ்யம் மற்றும் சேத்துப்பட்டு ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சூளை விஸ்வ பாரதி நடுநிலைப்பள்ளியில் பயிலும் 300க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு சிறப்பு மதிய உணவுகளை வழங்கினார்கள்.

மேலும் இந்நிகழ்வில் புல்லட் K.V. கோபிநாத் ,K.M கார்டன் நித்யானந்தம்,
R.சீனிவாசன்,M.R. ஏழுமலை,
R.பாஸ்கர்,V. சஞ்சய்,
வழக்கறிஞர் தயாளன்,TLV. தனலட்சுமி,
MD.சூர்யா, PR.சரவணன் T.மணி, J.குபேந்திரன், D A .செல்வம்,
N.மோகன்யாதவ்,G.டில்லிபாபு, RC. சேகர், R.D.குமார் சுமதி ஏழுமலை,
ராஜலட்சுமி,அனுஷா ராமன், மாடம்பாக்கம் மலையராஜா கே.செல்வம் உள்ளிட்ட காங்கிரஸ் இயக்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
