புதுக்கோட்டை :
ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட சங்க ஆலோசனை கூட்டம் பி. புவனேஸ்வரி
அவர்கள் தலைமையிலும், ஏ. கெளசல்யா மற்றும் பி. பி.சங்கீதா ஆகியோர் முன்னிலையிலும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில். மாநில தலைவர். மனித நேயர் முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த கூட்டத்தில் பல்நோக்கு மருத்துவமனை யாளர்கள் பணிமாற்றம் தகுதியானவர்களுக்கே வழங்கப்பட
வேண்டும், ஏனைய ஆர். சி. ஹெச். தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். ஊதிய உயர்வு மற்றும் பணிமாற்றம் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறுதியில் சி. அம்புஜம் அவர்கள் நன்றியுரை நல்கினார்.
