அண்ணா எம்.ஜி.ஆர் திராவிட மக்கள் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைப்பெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணா எம்.ஜி.ஆர் திராவிட மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் முத்துராமன் சிங்கப்பெருமாள் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு 40 தொகுதிகளிலும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளோம்.
தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி இந்தியாவிற்கு நாங்கள் ஒரு முன்னுதாரணமான கட்சியாக உருவேடுப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது நாட்டில் லஞ்சம், ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுவோம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எங்களின் தேர்தல் பரப்புரை அமையும் என்றும் தெரிவித்தார்
