இந்தியாவில் முதல்முறையாக இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கோவை முதல் சீரடி வரை சாய் சதன் எக்ஸ்பிரஸ் தனியார் ரயில் சேவை தொடங்கப்படுகிறது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைப்பெற்றது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்திய தெற்கு ரயில்வேயின் மூத்த வணிக பிரிவு மேலாளர் ஹரி கிருஷ்ணன் மற்றும் தமிழ் திரைப்பட நடிகை ஜனனி ஐயர் ஆகியோர் பங்கேற்றனர்

மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை ஜனனி ஐயர் பேசியதாவது: கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது வேறு நான் சில தினங்களுக்கு முன்பு தான் சாய்பாபா புத்தகத்தை வாங்கி படிக்க துவங்கினேன். அதற்குள் எனக்கு இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்

மேலும் ஹரிகிருஷ்ணன்அவர்கள் பேசியதாவது:எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும் தமிழிலேயே தேர்வு எழுதி வெற்றி பெற்று இந்த பதவியில் இருக்கின்றேன் நான் எந்த நிகழ்வுக்கு போனாலும் நான் தமிழில்தான் பேச விரும்புவேன், தமிழில் தான் பேசிக் கொண்டிருக்கிறேன் எனவும் இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ள பாரத் கௌரவ் திட்டத்தின்கீழ் கோயம்புத்தூரிலிருந்து சீரடிக்கு ஆன்மிகச் சுற்றுலா பயண அறிவிப்பு பாடத் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் இயக்கப்படும் முதல் ரயில் சேவை செய்து கோயம்புத்தூரில் இருந்து ஈரோடு சேலம் பெங்களூர் மந்த்ராலயம் வழியாக சீரடிக்கு செல்லும் இந்தப் பயணத்தில் ஒரே கட்டணத்தில் 4 நாட்களுக்கான உணவு மற்றும் ரயில் பயணத்திற்கு தேவையான படுக்கை விரிப்புகள், தலையணை, போர்வை, கிருமிநாசினி உள்ளிட்ட தினசரி பயன்பாட்டுப் பொருட்கள் சீரடியில் போக்குவரத்து வசதி வியாழக்கிழமை தரிசனம் தரிசனத்திற்கான காரணம் என அனைத்தும் மேலும் இரண்டடுக்கு ஏ.சி மற்றும் உயர்தர வசதி கொண்ட இந்த வாராந்திர ரயில் பயணம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி வெள்ளிக்கிழமை மாலை முடிவடையும்

மேலும் இந்த பயணத்தில் கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு சேலம் பெங்களூரு உள்ளிட்ட நிலையங்களில் பயணிகள் ஏறிக் கொள்ளலாம். அது மட்டுமின்றி தென்னிந்திய மற்றும் வட இந்திய ஜெயின் உணவு வகைகள் தரமாக தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான சைவ உணவு பயணிகள் வருவதற்கு ஏற்ப வழங்கப்படும்

இதில் கூடுதல் சலுகைகள் அவசர மருத்துவ சேவையில் காண ஒரு மருத்துவர் ரயிலில் பயணித்த பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பயணிகள் சேவை அதிகாரி மற்றும் பணி உதவியாளர் ஒருவர் இருப்பார். மந்த்ராலயம் மற்றும் சீரடிக்கு அனுபவமிக்க வழிகாட்டிகள் சுத்தமான சுகாதாரமான ரயில்வே கோச்சுகள் மற்றும் கழிப்பறைகள் கூடுதல் கட்டணத்தில் பயணிகள் விருப்பபடி மெனு
உள்ளிட்டவை அடங்கும் .

நிறைவாக கோயம்புத்தூரை தொடர்ந்து சென்னை, மதுரை, கன்னியாகுமரி மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து ஆன்மீக குடும்ப சுற்றுலா பயணங்களை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் வருங்காலத்தில் காசி, ராமேஸ்வரம், திருப்பதி, கயா மற்றும் புனித மாநிலமான உத்தரகாண்ட் தொடங்க உள்ளோம் என்று தெரிவித்தார்…