கள்ளக்குறிச்சி: மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையரை சந்தித்து புகார் மனு நகர செயலாளர் காமராஜ் அவர்கள் தலைமையில் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த புகார் மனுவில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், பேருந்துகளை முறையாக வரிசையாக நிறுத்த வேண்டும்,
கள்ளக்குறிச்சி நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்,
நான்கு முனை சந்திப்பில் நடை மேம்பாலம் அமைத்திட வேண்டும்,
பொது மக்கள் கூடுகின்ள இடங்களில் இலவச கழிவறைகளை அமைத்திட வேண்டும்,கள்ளக்குறிச்சியில் தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டது..

அப்போது இந்த மையத்தின் நிறுவன பொதுச்செயலாளர் மனித நேயர் முனைவர் நா.சு செல்வராஜ். துணை பொதுச்செயலாளர் எஸ். கல்யாண சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.