இந்திய இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு சங்கம் (YSPA) சார்பில் நடந்த ஒய்.எஸ். பி.ஏ இளைஞர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப்-2023 கடந்த 6ம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் நடைபெற்றது.

இப்போட்டியில் திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த பத்து வயது முதல் இருபது வயதிற்கு மேற்பட்ட 18 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு ஒற்றையர் மற்றும் அணி பிரிவுகளில் மொத்தமாக 18 தங்க பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டியில் வெற்றி பெற உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களான
இளவழகி (உலக கேரம் சாம்பியன்)
ச.சக்திவேல் (தேசிய கேரம் சாம்பியன்)
கௌதமன் (தேசிய வீரர்)
மற்றும் உலக கேரம் பயிற்சி மையத்திற்கும் இத்தருணத்தில் வீரர்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.