இளையோர் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் (YSPA) சார்பில் 3 வது தேசிய அளவிலான கேரம் பெடரேசன் கோப்பை – 2023 கடந்த 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை கோவாவில் அமைந்துள்ள கலங்குட்டில் நடைபெற்றது.

இப்போட்டியில் பல்வேறு பிரிவுகளில் (Under-8, 12, 14, 17, 19, Above-19 Boys & Girls) தமிழ்நாட்டைச் சேர்ந்த கேரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்று 22 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்து தமிழ்நாட்டிற்க்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் தமிழ்நாடு கேரம் அணி இன்று 06-10-2023 தேதி மாலை 7:00 மணியளவில் (சென்னை விமான நிலையம்) தமிழகம் திரும்புகிறார்கள்.தங்கம் வென்று சாதனை படைத்த கேரம் வீரர்கள் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் சக்திவேல் அவர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

