சென்னை : மே, 13
கொரோனா பெரும் தொற்று அச்சதால் பொது ஊரடங்கு அமல்படுத்தி வருவதால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் பல அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் உதவி வரும் நிலையில் சென்னை சேப்பாக்கம் பகுதி 62-வது வார்டு ரிச் ஸ்ட்ரீட் பகுதி ஏழை, எளிய மக்கள் 500 க்கும் மேற்பட்டோருக்கு தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும்,தி.நகர் சட்டமன்ற உறுப்பினருமான தி.நகர் சத்யா அவர்கள் மதிய அறுசுவை உணவு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேப்பாக்கம் பகுதி துணை அமைப்பாளர் எஸ்.எஸ்.எஸ்.ராமு, சேப்பாக்கம் பகுதி அவைத் தலைவர் தட்சணாமூர்த்தி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சேப்பாக்கம் பகுதி செயலாளர் எம்.கே.சிவா, வட்ட செயலாளர்கள் இளங்கோ,காமேஷ், சேப்பாக்கம் மகளிர் அணி பகுதி செயலாளர் டி.வண்ணமயில் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.