உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருத்தங்கல் நாடார் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் வடக்கு நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கொள்ளுமேடு பகுதியில் நடைப்பெற்றது..மேலும் இந்நிகழ்வில் தண்ணீர் தொட்டி, சிவன் கோவில், மகளிர் குழு கட்டிடம், பள்ளிகளில் உள்ள குடிநீர் குழாய் சுற்றி தூய்மை பணி நடைப்பெற்றது.
பின்னர் சோழவரம் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் தண்ணீரீன் முக்கியத்துவம் மற்றும் பயன் குறித்து உரையாடல் மற்றும் தெருக்கூத்து நாடகத்தின் மூலம் நடித்து காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் இதனைத்தொடர்ந்து நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் ஜோ. சம்பத்குமார் அவர்கள் தண்ணீரின் அவசியம் குறித்தப் விழிப்புணர்வு பாடலை பாடி சிந்தனையை தூண்டினார்.
இந்நிகழ்வில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சூசைமேரி, ஆசிரியைகள் கவிதா, கல்பனா, நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் கு.வெங்கடேசன் உள்ளிட்ட நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.