சென்னை: இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நடைபெற்று வரும் 50-வது தேசிய அளவிளான கேரம் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து சாதனை படைத்த தமிழக வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு மாநில கேரம் சங்கத்தின் மாநில தலைவர் எம். நாசர் கான் என்கிற அமான்,மாநில பொதுச்செயலாளர் ஏ. மரிய இருதயம் மற்றும் மாநில இணை செயலாளர் ச. சக்திவேல் உள்ளிட்ட தமிழ்நாடு மாநில கேரம் சங்கத்தின் நிர்வாகிகள் தமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

