சிந்தாரிப்பேட்டை : கடந்த 2018-2019ஆண்டு முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு நாள் கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னை, சிந்தாதிரிப்பேட்டை,காயிதே மில்லத் பின்புறம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில்
300க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே. இளமாறன் பேசுகையில்,
2144 முதுகலை ஆசிரியர்கள் காலிபணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பிறகும் இன்று வரை பணி வழங்கப்படமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாகவும், ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
ஒரு வருட காலம் ஆகியும் இதுவரை பணி வழங்கவில்லை.
கடந்த 1ம் தேதி 22098 ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

2018-2019 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக காத்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்பிய பிறகே புதிய காலி பணியிடங்களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.