மதுரை:தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலசங்கத்தின்
( TNTSWA ) மாநில செயற்குழு கூட்டம் மாநில சிறப்பு தலைவரும்,சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் கு.பாரதி அவர்கள் தலைமையில்
மதுரை திருப்பரங்குன்றம் கண்ணார திருமண மண்டபத்தில் வருகிற
30.07 2024 அன்று நடைபெற இருக்கிறது.

மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் இச்சங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை,
சங்கத்தின் சார்பாக தொடங்கப்பட்ட வழக்குகள் சம்பந்தமாக ஆலோசனை,

தற்பொழுது நிலவி வரும் பணி சூழல் குறித்து விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தல் மற்றும் முடிவு எடுத்தல்,
சங்கத்தின் கட்டமைப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஆராய்தல்,
டாஸ்மாக் விற்பனையாளர்களின் உரிமையை மீட்டுடெக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என இந்த சங்கத்தின் மாநில செயலாளர் கே. குமார் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் இச்சங்கத்தின் அனைத்து மாநில, மாவட்ட
மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என மாநில மையம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் இச்சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகளான பார்த்திபன்,ராஜசேகர், டில்லிபாபு உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.