கள்ளக்குறிச்சி:தமிழ்நாடு அரசு டெங்கு கொசு மற்றும் புழு ஒழிப்பு பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் நா. செல்வராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கினார்.
மேலும் இந் நிகழ்வில் மாவட்ட தலைவராக மணலூர்பேட்டை காமராஜ், துணைத் தலைவராக கரியாலூர் மாரியா பிள்ளை, செயலாளராக கரியாலூர் அண்ணாதுரை, துணைச் செயலாளராக மணலூர்பேட்டை தாமோதரன், பொருளாளராக கரியாலூர் முனுசாமி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும், அரசு ஊழியராக பணி நியமனம் செய்ய வேண்டும், மாத இறுதியில் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது. இறுதியில் தலைவர் காமராஜ் அவர்கள் நன்றியுரை கூறினார்.