2022 ஆம் ஆண்டிற்கான எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயத்தின் விருதுகள் பற்றிய பட்டியலை தமிழ்ப் பேராயத்தின் நிறுவனரும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் வேந்தருமான டாக்டர் தா. இரா.பாரிவேந்தர் எம்.பி. வெளியிட்டார்.

சென்னை: எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில் நுட்பகல்வி நிறுவன வடபழனி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்ப்பேராயத்தின் விருதுகள் பற்றிய பட்டியலை வெளியிட்டு டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் அவர்கள் கூறியதாவது :
அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டு வளர்ச்சி குறித்த விழிப்புணர்ச்சியை உலக முழுவதும் உருவாக்கும் நோக்கத்துடன் 2010 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது தான் எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயம்.
தமிழகம் எங்குமுள்ள சிறந்த தமிழறிஞர்கள், படைப்பாளிகள், அரசு சார் தமிழமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர்களைக் கொண்ட குழுக்களின் அறிவுரைகளின்படி தமிழ்ப்பேராயம் இயங்குகிறது.

இது விருப்பு, வெறுப்பற்ற நடுநிலையான செயல்பாடுகளைக் கொண்ட அமைப்பாகும்.
தமிழ்ப்பேராயத்தின் பணித்திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ்ப்பேராய விருதுகள் திட்டம். 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் பன்னிரண்டு தலைப்புகளில் சிறந்த தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள் மற்றும் சீரிய தமிழ்ப் பணியாற்றும் தமிழ் இதழ்கள் மற்றும் தமிழ்ச்சங்கங்கள் பயன் பெறும் விதத்தில் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இதுவரையில் 2 கோடியே 20 இலட்சம் அளவிலான பரிசுத்தொகை இதற்காக வழங்கப்பட்டுள்ளது.இதுவரையில் 89 படைப்பாளர்கள்விருதுபெற்றுள்ளனர். அவர்களில் அமெரிக்கா, கனடா, இலங்கை, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச்சேர்ந்தஅறிஞர்களும் படைப்பாளர்களும் அடங்குவர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்களுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் விருதுகள் அளிக்கப்பட்டுள்ளமைநோக்குதற்குரியது.

தமிழ்ப் பேராய விருதுகள் உரிய தகுதி வாய்ந்தோர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.இதைஉறுதிப்படுத்தும் விதத்தில் தமிழ்ப் பேராய விருதாளர்கள்அதன்பிறகு சாகித்திய அகாடெமி விருதுகளையும் செம்மொழித் தமிழாய்வு நிறுவன விருதுகளையும் மற்றும் குடியரசுத்தலைவர் விருதுகளையும் பெற்றுள்ளமை குறிக்கத்தக்கது.

2022 ஆம்ஆண்டுக்கானவிருதுகள் அறிவிப்பு பற்றிய தகவல் ஏழு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு, 407 பரிந்துரைகள் வரப்பெற்றன. அவற்றுள் தகுதி வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்க, ஏற்கெனவே இரண்டு நிலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியாக ஓய்வுபெற்ற மாண்புமிகு நீதியரசர்க. ஞானப்பிரகாசம் தலைமையில் பேராசிரியர் இரா. சந்திரசேகரன், முனைவர்என். சி.ராஜாமணி, எழுத்தாளர் அமிர்தம்சூர்யா, முனைவர் ஆதிராமுல்லை ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட அறிஞர் குழுவினர் விருதாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்தநிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்ப கல்விநிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர்சி.முத்தமிழ்ச்செல்வன், எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயத்தின் தலைவர் முனைவர் கரு. நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

விருதுகள் பற்றிய பட்டியல் விவரம் பின் வருமாறு :
விருதின்பெயர்நூல் / விருதாளர்பெயர்
1.புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது: வடசென்னை -நிவேதிதாலூயிஸ்
2.பாரதியார் கவிதைவிருது: வேட்டுவம்நூறு – மௌனன்யாத்ரிக்கா
3.அழ.வள்ளியப்பாகுழந்தைஇலக்கிய விருது: 1, உதைபந்து -ஏ. ஆர். முருகேசன், 2, மலைப்பூ -விழியன்
4.ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது :யாதும் ஊரே – சித்தார்த்தன்
5.ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அறிவியல் தமிழ் மற்றும் தொழில்நுட்ப விருது :தமிழர்மருத்துவம் -முனைவர்பால.சிவகடாட்சம்
6.முத்துத்தாண்டவர் தமிழிசை விருது :இந்தவிருதுக்குரிய தகுதியான பரிந்துரைகள் கிடைக்கபெறவில்லை
7.பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர்விருது :கவிதைமரபும் தொல்காப்பியமும் – பேராசிரியர் இராம. குருநாதன்
8.முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது: 1, தமிழரின் சுற்று வட்டப்பாதையில் தந்தைபெரியார்- கருவூர்கன்னல், 2, உலகத்தலைவர் அண்ணல் அம்பேத்கார் -குடந்தைபாலு
9.சுதேசமித்திரன் தமிழ்இதழ் விருது :மணல்வீடு – மு. அரிகிருஷ்ணன்
10.தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது: புதுவைதமிழ்ச்சங்கம் – முனைவர்வி. முத்து
11.அருணாசலக்கவிராயர் விருது :
இந்த விருதுக்குரிய தகுதியானபரிந்துரைகள்கிடைக்கபெறவில்லை
12.பாரிவேந்தர் பைந்தமிழ் விருது: பேராசிரியர் -சிற்பி பாலசுப்ரமணியம்