சென்னை:
அரசு மருத்துவர்களுக்கும் அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்களுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சமவாய்ப்பை உறுதி செய்திட வேண்டும்.
மருத்துவர்களின் 2500 காலிபணியிடங்களை நிரப்பிட , அறிவிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.பி (MRB) தேர்வை உடனடியாக நடத்திட வேண்டும்.
முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு பிறகு ஒப்பந்தப்பத்திரப் பணியை (Bond Posting) முடித்த மருத்துவர்களுக்கு உடனடியாக அசல் சான்றிதழ்கள் மற்றும் பணி அனுபவச் சான்றிதழ் (Original and Experience Certificate) வழங்க வேண்டும்.
அவர்களில் விருப்பமுள்ள மருத்துவர்களுக்கு, ஏற்கனவே நடைமுறையில் இருந்தது போல் சிறப்பு எம்.ஆர்.பி (Special MRB) தேர்வை நடத்தி பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்.
இது குறித்து இச்சங்கத்தின் சார்பில் ஊடகவியலாளர் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது. அப்போது பேசுகையில்:
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்கள் ,
அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்
களுக்கு சமவாய்ப்பை உறுதி செய்திட வேண்டும்.
தமிழ்நாட்டில்
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 6000 முதல் 7000 அரசுப்பணியில் இல்லாத மருத்துவர்கள் NEET PG தேர்வில் தேர்ச்சிபெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இளநிலை மருத்துவ (MBBS) இடங்கள் அதிகரிக்கின்றன. ஆண்டு தோறும் அரசு மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான MRB தேர்வும் நடை பெறுவதில்லை. இதனால், முதுநிலை மருத்துவ படிப்பிற்கு(MD/MS) போட்டியிடும் அரசு சாரா மருத்துவர்களின் எண்ணிக்கை தொடர்ந்துஅதிகரித்து வருகிறது.
முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களின் (Service Doctors ) எண்ணிக்கை சராசரியாக 1500 முதல் 2000 வரை உள்ளது.
தமிழ்நாட்டில் முதுநிலை(MD/MS) மருத்துவப் படிப்பில், தமிழை அரசின் ஒதுக்கீட்டிற்கு உள்ள மொத்த இடங்கள் தோராயமாக 1600 ஆகும்.
அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசால் , ‘அரசு மருத்துவர் களுக்கான இடஒதுக்கீடாக’ ( service quota) 50 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
• முது நிலை மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு திணிக்கப்படுவதற்கு முன்பு, அரசு மற்றும் அரசு சாரா மருத்துவர்கள் என இரண்டு தரப்பினருக்கும் , அவர்கள் படித்து முடித்த ஆண்டுகளை கணக்கிட்டு ‘அனுபவ மதிப்பெண்’ (experience marks ) என்ற மதிப்பெண்ணை,நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணுடன் கூடுதலாக வழங்கும் முறை இருந்தது.
முதுநிலை மருத்துவ நீட்தேர்வு வந்த பின் , அரசு சாரா மருத்துவர் களுக்கு வழங்கப்பட்டு வந்த ‘அனுபவ மதிப்பெண்’ ரத்தாகிவிட்டது. இது அவர்களுக்கு பாதிப்பை உருவாக்குகிறது.
தற்போது அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை(MD/MS) மற்றும் பட்டய (DIPLOMA) மருத்துவ படிப்புகளில் 50 விழுக்காடு இடங்கள் ‘அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடாக’ ( service quota) வழங்கப்படுகிறது.தொடர்ச்சியான சட்டப் போராட்டங்களினால் இது தொடர்கிறது.
மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் (District Head Quarters Hospital ) உள்ள DNB படிப்பு இடங்களில் 100 விழுக்காடு இடங்களும் அரசு மருத்துவர்
களுக்கே வழங்கப்படுகிறது.
மேலும், கிராமப்புற (Rural), தொலைதூர(Remote), மலைவாழ்(Hilly), பழங்குடியின (Tribal) பகுதிகளில் உள்ள, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்யும் அரசு மருத்துவர்களுக்கு ஓராண்டு,ஈராண்டு,மூன்றாண்டு பணி புரிந்திருந்தால் அவர்கள் பெற்ற நீட் மதிப்பெண்ணில், முறையே 10, 20, 30 விழுக்காடு மதிப்பெண்கள் ஊக்க மதிப்பெண்களாக (Incentive Marks ) வழங்கப்படுகிறது. இந்த ஊக்க மதிப்பெண்களை, அவர்கள் பெற்ற நீட் மதிப்பெண்ணுடன் இணைத்து தர வரிசைப்பட்டியல் (Rank list) தயாரிக்கப்படுகிறது.
“முதுநிலை மருத்துவக்
கலந்தாய்வில் போட்டியிடும் அரசு மருத்துவர்கள் 50 விழுக்காடு அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெறுவதாலும், ஊக்க மதிப்பெண் இணைந்த நீட் மதிப்பெண்ணுடன், மீதமுள்ள 50 விழுக்காடு பொதுப் போட்டி (Open Quota ) இடங்களிலும் போட்டியிடுவதாலும், படிப்பில் சேர்வதற்கான தகுதியாக, நீட் மதிப்பெண்ணை பூஜ்யம் பர்செண்டாக குறைப்பதாலும்,அவர்கள் அதிக இடங்களை பெற்றுவிடுகின்றனர்,
அரசு சாரா மருத்துவர்கள் இடங்களைப் பெறுவது கடினமாக உள்ளது எனவும், அதிக முக்கியத்துவம் இல்லாத படிப்புகளை தேர்ந்து எடுக்கும் நிலைக்கு உள்ளாவதாகவும், கல்வி கட்டணம் அதிகமாக உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்யும் நிலை ஏற்படுவதாகவும், தனியார் கல்லூரிகளின் அதிக அளவிலான கல்விக் கட்டணத்தை கட்ட இயலாத நிலையாலும், பலர் கலந்தாய்விலிருந்து விலகுவதாகவும், நல்ல மதிப்பெண் பெற்றும் ,அவர்கள் விரும்பிய படிப்புகளில் அரசு கல்லூரிகளில் சேர முடியாத சூழ்நிலை நிலவி வருவதாகவும்” அரசு சாரா மருத்துவர்கள் ,கூறுகின்றனர்.
தமிழகத்திலுள்ள முதுநிலை மருத்துவ இடங்களில் , அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு, அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு (service quota) மற்றும் ஊக்க மதிப்பெண்(Incentive Marks) வழங்கும் முறை தொடர வேண்டும்.
அதே வேளையில், அரசு சாரா மருத்துவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அனுபவ மதிப்பெண் (experience mark)வழங்கப்பட வேண்டும்.
முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் அரசு மருத்துவர்களுடைய ஊக்க மதிப்பெண்ணை , 50 விழுக்காடு அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டில் போட்டியிடும் போது கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மீதியுள்ள பொதுப் போட்டி இடங்களுக்கு (open quota) ஊக்க மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது . தங்களுடைய நீட் தேர்வு மதிப்பெண் மூலம் மட்டுமே போட்டியிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதே சமயம் , அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் தமிழகத்திலும், வேறு மாநிலங்களிலும் அரசு மருத்துவர்கள் அதிக இடங்களை பெற முடியவில்லை.
எனவே தமிழக அரசு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கும், அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்களுக்கும் சமவாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்திட , ஓர் நிபுணர் குழுவை அமைத்து ,ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்,
புதிய தாராளமயமாக்கல் கொள்கையும், மருத்துவம் தனியார் மயமானதும் , கார்ப்பரேட் மயமானதும் , மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்தும் சட்டமும், மருத்துவர்கள் தனியாக சொந்த கிளினிக்குகளை வைத்து நடத்துவதில் மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. மருத்துவர்களுக்கு நியாயமான ஊதியத்துடன் கூடிய ,தகுதிக்கேற்ற வேலை கிடைக்காத சூழலும் ஏற்பட்டுள்ளது.
இளம் மருத்துவர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாகி உள்ளது. இது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.
இதனால், அரசு மருத்துவமனைகளிலும் , மருத்துவக் கல்லூரியிலும் வேலைக்குச் சேர விரும்புகின்ற மருத்துவர்களின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பாததால், தற்பொழுது அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதோடு,
நோயாளிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, காலியாக உள்ள 2500 அரசு உதவி மருத்துவர்களின் பணியிடங்களை நிரப்பிட , அறிவிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.பி (MRB) தேர்வை உடனடியாக நடத்தி மருத்துவர்களை நியமிக்க வேண்டும்,
முதுநிலை மருத்துவம்(MD/MS), படித்து முடித்து,
MRB தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது DPH ல் பணிபுரியும் மருத்துவர்களை,
அவர்களது
சேவை மக்களுக்கு பயன் படும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் (DME/DMS) அவர்களை பயன்படுத்திட வேண்டும். அவர்களது கல்வித் தகுதியை ,துறை சார்ந்த திறனை முறையாகப் பயன்படுத்த வேண்டும்,
முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு பிறகு ஒப்பந்தப்பத்திரப் பணியை (Non Service Bond Posting) முடித்த மருத்துவர்களுக்கு, உடனடியாக அசல் கல்விச் சான்றிதழ்கள் ( Original Certificates ) மற்றும் பணி அனுபவச் சான்றிதழ் ( Experience Certificate) வழங்கிட வேண்டும்,
இந்த ஒப்பந்தப் பத்திரப் பணியை (Bond Posting) முடித்த மருத்துவர்களில் விருப்பமுள்ள மருத்துவர்களுக்கு, ஏற்கனவே நடைமுறையில் இருந்தது போல் சிறப்பு எம்.ஆர்.பி (Special MRB) தேர்வை நடத்தி பணி நிரந்தரம் வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த மருத்துவர்களின் தேவை பல்வேறு அரசு மருத்துவமனைகளில் உள்ளதால் இதை உடனடியாகச் செய்திட வேண்டும்,
மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பேராசிரியர், இணைப் பேராசிரியர் பதவி உயர்வுகளை விரைந்து நடத்த வேண்டும். தேசிய மருத்துவ ஆணையத்தின்
( NMC) விதிமுறைப்படி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவக் கல்வி சாரா மருத்துவர்கள் (Non Academic Doctors) பதவிகளை உருவாக்கி நியமித்திட வேண்டும்,
குறைந்த ஊதியம் மற்றும் அதிகமான பணிச் சுமை, மோசமான சூழல் (Toxic Working Environment ) காரணமாக பணியில் உள்ள அரசு மருத்துவர்கள் பணியிலிருந்து விலகும் சூழல் உள்ளது.எனவே, அவர்களது ஊதியத்தை உயர்த்திட வேண்டும். ஊதியப் பட்டை 4 ஐ ( Pay Band 4) 12 ஆண்டுகள் பணி முடித்த உடன் வழங்கிட வேண்டும் . அரசு மருத்துவர்களின் இந்த நீண்ட காலக் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்,
மத்திய அரசுக்கு இணையான ஊதிய விகிதம், மற்றும் கால முறை பதவி உயர்வு (time bound promotion)வழங்க வேண்டும்,
அரசு மருத்துவர்களுக்கு 24 மணி நேர வேலை வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். இது அப்பட்டமான, தொழிலாளர் விரோத,மனித உரிமைக்கு எதிரான நடைமுறையாகும். இந்த 24 மணி நேரப் பணி வழங்கல் நடைமுறையை மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி உடனடியாக கைவிட வேண்டும்.எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்பதை உறுதிப்படுத்திட வேண்டும்,
அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி முது நிலை மருத்துவம் படிக்கும் அரசு மருத்துவர்களிடம், பணி ஓய்வு பெறும் வரை அரசுப் பணியில் தொடர வேண்டும் என அரசு , பத்திரம் எழுதிவாங்குவதும், விருப்ப ஓய்வு மறுக்கப்படுவதும், மிகக் குறைந்த ஊதியம் வழங்குவதும் அவர்களை கொத்தடிமைகள் போல் நடத்துவதாக உள்ளது. இதை கைவிட வேண்டும். இந்த நடைமுறையை , மத்திய அரசில் உள்ளது போல் ஒரு அரசு மருத்துவர் 3 ஆண்டு படிப்பு படித்தால், படிப்பை முடித்த பிறகு 5 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும் என மாற்ற வேண்டும்,
விருப்ப ஓய்வு பெற விரும்பும் அரசு மருத்துவர்களுக்கு விருப்ப ஓய்வை வழங்கிட வேண்டும்,
மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை வழங்கிட வேண்டும், ஒன்றிய அரசு மருந்துகளின் விலையை உயர்த்தி உள்ளதை திரும்பப்பெற வேண்டும்.
எழுபது வயதை அடைந்தவர்கள் அனைவருக்கும் பிரதமர் காப்பீடு திட்டம் வழங்கப்படும் என்பது முழுமையான பலனளிக்காது.
பிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் , பொது சுகாதாரத்துறையை வலுவிழக்கச் செய்யும் ,தனியார் மயமாக்கும் , அரசு மருத்துவ
மனைகளில் இலவச சிகிச்சை என்பதை ஒழித்துக்கட்டும் முயற்சியை செய்து கொண்டே , 70 வயதை அடைந்தவர்கள் அனைவருக்கும் பிரதமர் காப்பீடு என்பது அரசியல் நோக்கம் கொண்டதாகும். தனியார் மயமாக்கல் கொள்கையையும், மருத்துவக் காப்பீடை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ சிகிச்சை முறையை தீவிரமாக நடைமுறை படுத்தப் படுவதும் கைவிடப்பட வேண்டும். மருத்துவக் காப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ முறை, காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இடம் பெற முடியாத மத்தியத்தர மக்களை மிகவும் பாதிக்கும். ஏழைகளுக்கும் அனைத்து சிகிச்சைகளும்,பரிசோதனைகளும் இலவசம் என்பதையும் ஒழித்துக்கட்டி விடும். எனவே, மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, பொது சுகாதாரத்துறை மூலம், அனைவருக்கும் அனைத்து சிகிச்சைகளும்,பரிசோதனைகளும் அரசு மருத்துவமனைகளில் இலவசம் என்பதை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உறுதி செய்திட வேண்டும்.
இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் சமூக சமத்துவத்திற்கான
டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, மருத்துவர்கள் என்.முகமது அஃப்னான், ஜெ.மோனிஷ்,
ஆர்.ஸ்னேகா ஸ்ருதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.