குரோம்பேட்டை :
மகாகவி பாரதியார் பிறந்த நாளினை முன்னிட்டு சோஷியல் புரோடக்ஷன் (சமூக பாதுகாப்பு அமைப்பு) சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை, குரோம்பேட்டையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த அமைப்பின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமையில் சிறப்ப்பாக நடைபெற்றது.
மேலும் இந்த விழாவில் சென்னையில் உள்ள கலைஞர்களை ஒருங்கிணைத்து அற்புதமாக முனைவர்.ஸ்ரீபிரியா அவர்களும், மலேசியாவிலிருந்து கலைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை அம்பாசிடர் முனைவர்.ராகவி பவனேஸ்வரி அவர்கள் நேர்த்தியாக ஒருங்கிணைத்திருந்தார்.
நாட்டியராதனா நடன பள்ளி மற்றும் மலேசியாவை சேர்ந்த சங்கீத நாட்டிய குருகுலத்தை சேர்ந்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கலைத்துறையை சேர்ந்த பலர் கலந்துக்கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் மாணவர்களின் கலைத்திறனை வெளி கொண்டு வரும் விதமாக கலைஞர்களின் பரதம், வீணை, யோகா, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சியின் மூலம் தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினர்…
இந்த நிகழ்வின் இறுதியாக கலைத் திறனை சிறப்பாக வெளிபடுத்தியவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மேலும் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பல்வேறு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு தங்க மகன் விருதுகள் தங்கமகள் விருதுகள், ஆற்றல் மங்கை விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், சிறந்த சமூக சேவகர் விருதுகள் போன்ற விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூக பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகளான கார்த்திக்குமார், ஹரிஹரன், இலக்கியா உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
(எஸ்.ஏ.ராஜ்குமார்
செய்தியாளர்
யுகம் நியூஸ்)