கல்லக்குறிச்சி:
மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கல்லக்குறிச்சி நகராட்சியின் செயல்படாத நிர்வாகத்தை கண்டித்தும், ,மக்கள் விரோத செயல்களை கண்டித்தும், லஞ்ச ஊழல்களை கண்டித்தும், மாநில பொதுச்செயலாளர் எஸ். கல்யாண சுந்தரம் அவர்கள் தலைமையிலும். மகளிரணி
பொறுப்பாளர் இ. கௌதமி, மாநில செயற்குழு உறுப்பினர் எம். ராஜகோபால் ஆகியோர் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் கல்லக்குறிச்சி நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிறுவன பொதுச்செயலாளர் மனித நேயர். முனைவர்.நா. சு. செல்வராஜ் சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட செயலாளர் பி. ஆறுமுகம் அவர்கள் நன்றி கூறினார்.
மேலும் இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.