வருமான வரித்துறை விளையாட்டு மற்றும் மன மகிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா நிகழ்வு!

நுங்கம்பாக்கம்: வருமான வரித் துறை விளையாட்டு மற்றும் மன மகிழ் மன்றம் மற்றும் வருமான வரித்துறை தோழி-பெண்கள் அமைப்பு சார்பில் வருமான வரித்துறை வளாகம் எதிரிலுள்ள வைகை அரங்கில் தமிழர்களின் பாராம்பரிய பொங்கல் விழா சிறப்பாக நடைப்பெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி துறை முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் ஐ. ஆர். எஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பொங்கல் விழாவினை துவக்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வினை இதன் தலைவர் திவாகர் ஐ. ஆர். எஸ், துணைத்தலைவர் சஞ்சய் காந்தி
ஐ.ஆர்.எஸ், பொதுச்செயலாளர் சாமிநாதன் ஆகியோர் சிறப்புற ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் ஒரு நிகழ்வாக உத்தரா எம்.எஸ். கலைக்குழு கலைமாமணி மதுரை முத்து அவர்களின் கரகம், காவடி, நையாண்டி மேளம், பாரம்பரிய இசையுடன் கூடிய நடனம் நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் அலுவலர்கள் மற்றும் செயற்க் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திறளாக கலந்துக்கொண்டு பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.