சென்னை:அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை உயர்நீதி மன்றம் அருகில் கழக பொருளாளர் பூங்கா பி.கே. மாரி அவர்கள் ஏற்பாட்டில்,அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள் இணைந்து மறைந்த முன்னாள் முதல்வர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து புகழ் மரியாதை செலுத்தினர்.

மேலும் இந்நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் திறளான கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.