தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு!
சென்னை:தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு கூட்டம் இக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.இரவி அவர்கள் தலைமையில் சென்னை சேப்பாக்கத்திலுள்ள நிருபர்கள் சங்கத்தில் நடைப்பெற்றது.

முதல் நிகழ்வாக பீஹார் முன்னாள் முதலமைச்சர் கற்பூரி தாகூர் அவர்களின் 100வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு புகழ் மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக மற்றும் மதச்சார்பின்மை கொள்கைகளை கொண்ட கட்சிகளுடன் இணைந்து செயல்படுவும், பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்த முடிவுகளை எடுக்க மாநில தலைவருக்கு முழு அதிகாரம் வழங்குவது குறித்தும், பாராளுமன்ற தேர்தல் குழு அமைப்பது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களாக பனசை அரங்கன்-தஞ்சாவூர், ஜெயராமன் எஸ். கே-தென் சென்னை, தனசேகரன் ஆர்-திருப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு இதன் மாநில தலைவர் எம். எல். இரவி அவர்கள் அதிகார பூர்வமாக அறிவித்தார்.


