பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்!

வாழப்பாடி:
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
வாழப்பாடியில். கலைச்செல்வி அவர்கள் தலைமையிலும்.சுமதி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. ஈஸ்வரி அவர்கள்
வரவேற்புரையாற்றினார்.

இச்சங்கத்தின் மாநிலத்தலைவர் மனிதநேயர் முனைவர். நா. சு. செல்வராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். இறுதியில் மாதம்மாள் அவர்கள் நன்றியுரை நல்கினார்.

மேலும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில்
பணிநிரந்தரம்,பணிபாதுகாப்பு,
ஊதிய உயர்வு,அரசுவிடுமுறை நாட்கள் விடுப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.