தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள120 க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள்! அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆய்வு!!
தண்டையார்பேட்டை : ஜூன், 23
தண்டையார்பேட்டை மண்டலத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பரிசோதனை முகாம்களை தமிழ் வளர்ச்சித் துறை .அமைச்சர் மாபா க.பாண்டியராஜன், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
தமிழக முதலமைச்சரின் உத்தரவை ஏற்று தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 38- வது வட்டம் பட்டேல் நகர், 39-வது வட்டம், செரியன் நகர், பகுதி மாநகராட்சி பள்ளிகள், மற்றும் ஆரம்ப சுகாதார மையத்தில், நடைப்பெற்ற மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் கள ஆய்வு பணிகளை அமைச்சர் மாபா க.பாண்டியராஜன், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
களப்பணியாளர்களுக்கு அமைச்சரின் அறிவுரைகள்”” ஆய்வுக்கு பின் அமைச்சர் க.பாண்டியராஜன், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது…
தமிழக முதலமைச்சரின் உத்தரவை ஏற்று இன்று தண்டையார்பேட்டை மண்டலத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகள் மற்றும் வீடுகளில் தனிமை படுத்தப்பட்ட பல நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
மேலும் வைரஸ் தீவிரத்தை தடுக்க மண்டலத்தில் 50 ஆக இருந்த மருத்துவ பரிசோதனை முகாமை 120 ஆக உயர்த்தி மருத்துவ பரிசோதனைகளை விரிவுபடுத்தி முழு வீச்சில் பரிசோதனை முகாம் அந்தந்த பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக புனித உயிர் காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி களப்பணியாளர்கள் நோய் அடையாள அறிகுறிகள் உள்ள நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று இரத்தம், மற்றும் காய்ச்சல், அளவுகளை கண்டறியப்பட்டு
தகவல்களை பட்டியலிட்டு உடனுக்குடன் வாட்ஸ் அப் குரூப்பில் தெரிவிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. உண்மையில் களப்பணியாளர்கள் செய்யும் மக்கள் பணி அரசுக்கு மட்டும் அல்ல கடவுளுக்கு செய்யும் தொண்டாகவே கருத வேண்டும்.
அதேப்போன்று அவர்கள் தினமும் களப்பணிகளில் ஈடுபடும் முன்னதாக அவர்களுக்கான வைட்டமின் மாத்திரைகள், மற்றும் முககவசம், சானிடைசர்கள், கபசுர மூலிகை குடிநீர் அருந்திய பின்னர் பணிகளை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீடுகளில் நோய் தொற்று அறிகுறியுடன் உள்ள தனிமை படுத்தப்பட்ட நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயால்
அவதிப்படும் குடும்ப உறுப்பினர்களுக்கு தன்னார்வலர்கள் தொண்டு நிறுவன அமைப்புகள் மூலம் மருந்துகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது என அப்போது தெரிவித்தார்.