கொரோனா பரவல் ஊரடங்கில் 3 வேளை உணவு வழங்கும் லார்ட்ஸ் கிளப்ஸ் இண்டர்நேஷ்னல்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கில் உண்ண உணவின்றி சாலையோரம் பசியுடன் வாழும் ஏழை எளியவர்களுக்கு தினமும் லார்ட்ஸ் கிளப்ஸ் இன்டெர்நேஷனல் சார்பாக பல்வேறு கிளைகளின் உறுப்பினர்கள் மூலமாக மதிய உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் என 300 முதல் 500 நபர்களுக்கு கொரோனா ஊரடங்கு தொடக்க நாள் முதல் இதுநாள் வரையில் தொடர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் அளித்து வருகிறது .

இதன் தொடர்ச்சியாக 500 உணவு பொட்டலங்கள் மற்றும்500 குடிநீர் பாட்டில்கள் என சென்னை மியூசிக் அகாடமி மேம்பாலம் அருகில் துவங்கி ராயப்பேட்டை, கோயம்பேடு, மதுரவாயல், கொளத்தூர் பகுதிக்கு 500 உணவு பார்சல்களும் 500 குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டது.
இச்சேவையை லார்ட்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனரும் தலைவருமான ம.பால்ராஜ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியில் செந்தில்குமார், ராஜ்குமார், திருஞானம், தாமோதரன், மணிகண்டன், பாலகுமாரன் உள்ளிட்ட இராயபேட்டை கிளை உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.