சென்னை :
அரிமா மாவட்டம் 324-A1 உலக சேவை தின .நாள் கொண்டாட்டம் சென்னை சாந்தோமில் உள்ளசி.எஸ்.ஐ காது கேளாதோர் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.

11 மண்டலங்களை உள்ளடங்கிய அரிமா 324-A1 மாவட்டம் ஒவ்வொரு அரிமா மண்டலமும் ஒவ்வொரு சேவைத் திட்டங்களை செய்த நிலையில்
மண்டலம் 6 ல் மண்டலத் தலைவர் வீர மணிகண்டன் அவர்களின் தலைமையில், மாவட்ட ஆளுநர் அரிமா பி.வி. பிரகாஷ்குமார் மற்றும் துணை நிலை ஆளுநர் அரிமா எஸ்.வி.மாணிக்கம் அவர்களின் முன்னிலையில் வட்டார தலைவர்கள் அரிமா உமா ஜெகதீஷ் ,அரிமா பரிதா, அரிமா ஹரிபழனி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் அரிமா சங்கங்கள் முகக் கவசங்களை பொது மக்களுக்கு வழங்கியது.

மெட்ராஸ் லஸ் அரிமா சங்கம் சென்னை சாந்தோமில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்திற்கு முக கவசங்களை வழங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு மெட்ராஸ் லஸ் அரிமா சங்கத் தலைவர் அரிமா தியாகராஜன், சங்க செயலாளர் அரிமா சி.எஸ்.நந்தகுமார், சங்க பொருளாளர் அரிமா நாகராஜன் தங்கம், முதலாம் துணை தலைவர் அரிமா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மெட்ராஸ் லஸ் அரிமா சங்கத்தின் செயலாளர் அரிமா சி.எஸ். நந்தகுமார் இந்நிகழ்ச்சியைப் பற்றி கூறுகையில் இன்று செயல்பாட்டில் உள்ள தளர்வுகள் பொருளாதார அடிப்படையைக் கொண்டது. கொரானா என்கிற கொடிய அரக்கன் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை. இந் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் தனி மனித ஒழுக்கம் மட்டுமே நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதற்கு அரசாங்கமும், மருத்துவர்களும், காட்டும் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் அப்படி அரசாங்கம் காட்டும் வழிமுறைகளில் ஒன்று தான் இந்த முக கவசம் அணிவது ஆகவே ஒவ்வொருவரும் நம் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்
முகக் கவசம் அணிவது கட்டாயம் அதை முறையாக கடைப்பிடித்தால் கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்