கோட்டூர்புரம் சித்ரா நகர் அனைத்து மக்கள் நல்வாழ்வு சங்கம் (KKNS)சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு

கோட்டூர்புரம் :

கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க ஊரடங்கு தடை உத்தரவினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளான நிலையில் சமூக நோக்குடன் கோட்டூர்புரம் சித்ரா நகர் அனைத்து மக்கள் நல்வாழ்வு சங்கம் மக்கள் பணியே மகேசன் பணி என்று செய்யும் தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர்களுக்கு சூடம் ஏற்றியும், ரோஜா மலர்களை தூவியும் மரியாதை செலுத்தி கெளரவ படுத்தினர்.

மேலும் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளாக அத்தியாவசிய பொருட்களான அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோட்டூர்புரம் சித்ரா நகர் அனைத்து மக்கள் நல்வாழ்வு சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.