கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் 15ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் முப்பெரும் விழா
வடபழனி:
கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஐஸ்வர்யம் பண்ணை நிலம் கையேடு வெளியீட்டு விழா மற்றும் விற்பனையில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் நோக்கில் சிறந்த சாதனையாளர் விருதுகள் உள்ளிட்ட முப்பெரும் குடும்ப விழா குத்துவிளக்கேற்றி வடபழனி, குமரன் காலனியிலுள்ள சிகரம் அரங்கத்தில் கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் கிங்மேக்கர்ஸ் டாக்டர்.எஸ்.ராஜசேகர் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRAA) தேசிய தலைவர் ஆ.ஹென்றி, நீதியரசர் NFJ பொன்னுதுரை, ஏ.பி.ஜே .அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் இவ்விழாவில் கலந்துக் கொண்ட அரிமா.அமுதா மதியழகன் அவர்கள் கிங் மேக்கர்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை பயிற்சி வகுப்பு மூலம் எழுச்சியுற எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வுகளை ஜெயா டிவி புகழ் மோகன்ராஜ் அவர்கள் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கினார்.
இதனை தொடர்ந்து கிங்மேக்கர்ஸ் ராஜசேகர் “வெற்றியின் ரகசியம்” என்ற தலைப்பில் எழுச்சி உரை ஆற்றினார்.
இந்த குடும்ப விழாவில் கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் விற்பனை முகவர்கள் பெரும்திரளாக கலந்துகொண்டு உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடித்து,சுய ஒழுங்குடன் பின்பற்றி சிறபித்தனர்.
எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்கள் முயற்சியில் பங்கெடுத்து கொண்டிருக்கும் அணைத்து நல் உள்ளங்களின் வாழ்த்துக்களுடன் இயற்கை வளங்களை பாதுகாக்கும் அணைத்து முயற்சிகளும் நடைபெறும்
வண்ணம் எங்கள் களப்பணி தொடரும் என்பதை உறுதிகொள்வோம்.
வாருங்கள் கை கோர்போம் , விவசாயம் காப்போம் , இயற்கை வளம் பாதுகாப்போம் என்று கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கிங் மேக்கர்ஸ் ராஜசேகர் தெரிவித்தார்..