மயிலாப்பூர்:
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மறைந்த கலைஞர் அவர்களின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தென் மேற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் மயிலை கிழக்குப்பகுதியில் 124 (அ) வட்டத்தில் உள்ள தெற்கு மாட வீதியில் தென் மேற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் லயன் சி.எஸ்.நந்தகுமார் அவர்களின் தலைமையில், மயிலை கிழக்குப்பகுதி பொறுப்பாளர் எஸ். முரளி மற்றும் 124 வது வட்ட மாமன்ற உறுப்பினர் விமலா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், 124 வட்ட பொறுப்பாளர் த. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்தும் கழக கொடி ஏற்றினார்.

மேலும் பொதுமக்களுக்கு முக்கனிகள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியை 124 வது வட்ட வர்த்தக அணி அமைப்பாளர்
மார்க்கெட் சுரேஷ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் அவருக்கு தென் மேற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் லயன் சி. எஸ். நந்தகுமார் அவர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள்,பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..
