இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நலிவடைந்த பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு

சேப்பாக்கம் : இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் உள்ள பல நலிந்த பத்திரிகையாளர்களுக்கு உதவும் வகையில் 4 வது கட்டமாக 25 பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு சென்னை, சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மோகன் தாரா அவர்கள் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் சூளை சீனிவாசன் அவர்கள் முன்னிலை வகிக்க, ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாகி ராஜா அவர்கள் நலிவடைந்த பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும் இந் நிகழ்வில் புலனாய்வு செய்தியாளர் விமலேஸ்வரன் அவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர் சபீர் பாஷா அவர்கள் உள்பட பல பத்திரிக்கை சொந்தங்கள் கலந்துக் கொண்டனர்.

மேலும் 5 வது கட்டமாக வருகிற வியாழகிழமை 25 பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.