அரக்கோணம்:அருந்தமிழ்ச் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா அரக்கோணம் டவுன் ஹாலில் இதன் நிறுவனர் பாப்ஜி சந்தர் அவர்கள் தலைமையிலும், ஒருங்கிணைப்பாளர் கேத்ரின் மெட்டில்டா அவர்கள் முன்னிலையிலும்
சிறப்புற நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் கவிஞர் சொ.உமா பதி அவர்கள் எழுதிய பேரின்ப வாழ்வு என்னும் தன்முனை கவிதை நூல் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதனை மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பெயர்த்தி மதிப்புறு முனைவர். இரா. உமா பாரதி அவர்கள் வெளியிட்டார். இதன் முதல் பிரதியைக் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் பேரன்
கவிஞர் குலசை அ. வேலுப்பிள்ளை அவர்கள் பெற்றுக் கொண்டார்.
அருகில் கலை நன்மணி மற்றும் தமிழ்நாடு நல்லாசிரியர் விருது பெற்ற விருதாளர் அ. ஷாஜகான் அவர்கள் உடனிருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் பங்குப்பெற்ற
ஊத்துக்குளியை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் உமாபதி அவர்களுக்கு தோல்வியில் கலங்கேல் விருது மற்றும் மகாகவி பாரதியார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.