ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்களின் நீண்ட வருட வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றிய
தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த மனித நேயர் முனைவர் செல்வராஜ்!
கள்ளக்குறிச்சி:
ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்களின் நீண்ட வருட கோரிக்கைகளான 874 ஆர். சி. ஹெச். தூய்மை பணியாளர்களை மருத்துவமனை பணியாளர்களாக பணி நியமித்தும்.. அவர்களுக்கு ஒரு நாளைக்கான ரூ 50/ என்கிற மிக மிக குறைந்த, வாழ்வாதாரமே கேள்விக்குறியான தினக்கூலியை மாதம் ரூ15000/ என உயர்த்தியும்,
ஏனைய ஆர். சி. ஹெச். தூய்மை பணியாளர்களையும்.
மருத்துவமனை பணியாளர்கள் காலிப்பணியிடம் ஏற்படும் போதெல்லாம். பணி மூப்பு அடிப்படையில் பணிமாற்றம் செய்யப்படுவார்கள் என ஆணையிட்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும்
இப்பணியாளர்களுக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த ஏ.ஐ.டி. யூ.சி. தொழிற்சங்க த்திற்கும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர். இரா. முத்தரசன் அவர்களுக்கும்,
டாக்டர். ஜி.ஆர். இரவீந்திரநாத் மற்றும் டாக்டர். சாந்தி ஆகியோர்களுக்கும்,கடும் நிதி நெருக்கடியிலும் சென்னையில் நடந்த பல வாழ்வாதாரத்திற்கான உரிமை போராட்டங்களில் கலந்து கொண்ட அனைத்து ஆர். சி. ஹெச் தூய்மை பணியாளர்களுக்கும்
இச்சங்கத்தின் சார்பில்
மனித நேயரும்,மாநில தலைவருமான முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்கள் நன்றியை தெரிவித்தார்.
எஸ். ஏ. ராஜ்குமார்- செய்தியாளர் (யுகம் நியூஸ்)