சென்னை : மே, 14

தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மற்றும் தொடர் ஊரடங்கு நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கழகத் தலைவர் மு.க.. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜே.அன்பழகன் அவர்களின் ஆலோசனையின்படி சென்னை மேற்கு பகுதி 110 வது வட்டக் கழகம் சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் நுங்கை வி.எஸ்.ராஜு அவர்கள் ஏற்பாட்டில் ஆயிரம் விளக்கு மேற்கு பகுதி கழகச் செயலாளர் அகஸ்டின் பாபு மற்றும் ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி கழகச் செயலாளர் மா.பா.அண்ணாதுரை ஆகியோர்களின் முன்னிலையில் 110வது வட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம், புஷ்பா நகரிலுள்ள செங்கேணியம்மன் கோவில் அருகில் உள்ள பகுதியில் வாழும் 1200 ஏழை ,எளிய, நலிவுற்ற குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வழங்கினார்.

இதில் 110வது வட்ட செயலாளர் இளங்கோ உள்ளிட்ட
வட்ட கழக நிர்வாகிகள்,பகுதி பிரதிநிதிகள் பலர் கலந்துக் கொண்டனர்.