திருப்பூரில் சட்டவிரோதமாக இயங்கி வரும் சாயப்பட்டறை நிறுவனங்களை உடனடியாக மூடக்கோரி  அறவழி கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்:
தமிழ்நாடு நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில்
சட்டவிரோதமாக இயங்கி வரும் சாயப்பட்டறை நிறுவனங்களுக்கு எதிராகப் போராடிய, சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், சட்டவிரோதமாக இயங்கும் சாயப்பட்டறை நிறுவனங்களை உடனடியாக மூடக்கோரியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் இதன் தலைவர் சிவசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாடாளும் மக்கள் கட்சியின்
மாநில துணைத்தலைவர் வ.தனலட்சுமி,
மாநில அமைப்பு பொதுச்செயலாளர் வெள்ளைச்சாமி பாக்கியராஜ் மற்றும் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு
கண்டன உரை ஆற்றினர்

மேலும் இதில் மூத்த வழக்கறிஞரும், தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் தலைவருமான த.குருசாமி, சேலம் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.பழனியப்பன் உட்பட
பல்வேறு சமூக ஆர்வலர்கள் கலந்துக்கொண்டு
கண்டனப் பேருரை ஆற்றினர்.