சென்னை மெரினா கடற்கரையில்
சாலையோர வியாபாரிகள், துப்புரவு பணியாளர்கள்
1000 பேருக்கு ரெயின் கோட், குடை: சிட்டிசன், டிஸ்னி மற்றும்
பூமி தொண்டு நிறுவனம் இணைந்து வழங்கியது.

சென்னை: மழை காலம் துவங்கி உள்ள நிலையில் சாலையோர வியாபாரிகள், துப்புரவு பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் 1000 பேருக்கு தரமான ரெயின் கோட் மற்றும் குடைகளை இன்று சிட்டிசன் அமைப்பு, டிஸ்னி நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு பிரிவு மற்றும் பூமி தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து சென்னை மெரினா கடற்கரையில் வழங்கியது.

சமூக பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக மழை காலத்தில் ஏழை எளிய மக்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் தங்கள் பணிகளை மேற்கொள்ள அவர்களுக்கு உதவிடும் விதமாக இவை வழங்கப்பட்டதாக இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதில் குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக டிஸ்னி கார்ட்டூன் பொறிக்கப்பட்ட குடைகள் மற்றும் ரெயின்கோட்டுகள் 300 பேருக்கு வழங்கப்பட்டன. கார்ட்டூன் படங்களை பார்த்த குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். இவை அவர்களிடம் ஒரு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தின.

மேலும் மெரினா கடற்கரை மற்றும் பிற இடங்களில் சாலையோரம் உள்ள வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் மழை காலத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் தங்கள் பணிகளை தொடர 400 பேருக்கு ரெயின்கோட்டுகள் வழங்கப்பட்டன. மேலும் ஓய்வின்றி உழைக்கும் துப்புரவு பணியாளர்கள், கழிவு நீர் அகற்றும் பணியாளர்கள் என தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள 300 பேருக்கும் ரெயின் கோட்டுகள் வழங்கப்பட்டன.மேலும் பேசிய அவர், பூமி தொண்டு நிறுவனம் மற்றும் டிஸ்னி உடன் இணைந்து இந்த உதவிகளை செய்வது என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தரமான தயாரிப்புகளை அவர்களுக்கு வழங்குவது என்பது சமூக பொறுப்புணர்வுடன் பணியாற்றும் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும். இவற்றை பெற்றுக் கொண்ட மக்களின் முகத்தில் நாங்கள் பார்த்த உற்சாகமானது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது என்று தெரிவித்தார்.
இவற்றைப் பெற்றுக் கொண்ட மக்கள் இந்த அமைப்புகளுக்கு தங்களின் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் பேசிய அவர், பூமி தொண்டு நிறுவனம் மற்றும் டிஸ்னி உடன் இணைந்து இந்த உதவிகளை செய்வது என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தரமான தயாரிப்புகளை அவர்களுக்கு வழங்குவது என்பது சமூக பொறுப்புணர்வுடன் பணியாற்றும் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும். இவற்றை பெற்றுக் கொண்ட மக்களின் முகத்தில் நாங்கள் பார்த்த உற்சாகமானது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது என்று தெரிவித்தார்.
இவற்றைப் பெற்றுக் கொண்ட மக்கள் இந்த அமைப்புகளுக்கு தங்களின் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டனர்.