பெரம்பூர் :சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் தலைவரும், தமிழக வாகன ஒட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனருமான சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மாதவரம் நெடுஞ்சாலையிலுள்ள ஆர்.கே. மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா க. பாண்டியராஜன் மற்றும் முன்னாள் அமைச்சரும்,கழக அமைப்பு செயலாளருமான சி.பொன்னையன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்..

மேலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக 10 கிலோ அரிசி ,வேஷ்டி – சேலை மற்றும் மதிய அறுசுவை உணவு ஆகியவற்றை வழங்கினர்.மேலும் இந் நிகழ்வில் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளர் T.G. வெங்கடேஷ் பாபு
கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர்.கமலகண்ணன்,
69 வது வட்ட கழக செயலாளர் வி.லில்லி கல்பனா மற்றும்
கொளத்தூர் கே.கணேஷ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமை சங்கமான தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் துணைத்தலைவர் டி.ஆர்.மாதேஸ்வரன் மற்றும்
மாநில செயலாளர் ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்ற இவ்விழாவில் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் துணைவியார் சுதா பாலகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் செயலாளர் சுரேந்திரன்,
செயற்குழு உறுப்பினர்கள் செந்தில் அருள்,
துரைராஜ், சீனிவாசன், ரெக்ஸ்
ஆகியோர் இணைந்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்…

எஸ்.ஏ.ராஜ்குமார்

செய்தியாளர்

96 77 34 91 96