அறிஞர் அண்ணா அவர்களின் 52-வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நுங்கம்பாக்கம், ஜோசியர் தெருவில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவரது திருவுறுவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வின் போது இச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சுகுமார் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் மாதேஸ்வரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.