ஈரோடு:தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளலரும்,மூத்த வழக்கறிஞருமான சே. பசும்பொன் பாண்டியன் அவர்கள் ஆசிரியராக தொகுத்து வழங்கி“திரமிள சங்கம் முதல் திராவிட மாடல் வரை” என்கிற திராவிட சித்தாந்த புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.கழகத்தலைவர் மு. க.ஸ்டாலின் ஈரோட்டில் வெளியிட்டார்.

மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது கழக துணை பொதுச்செயலாளர் செந்தில்குமார்,ஈரோடு மாவட்டக் கழகச்செயலாளர் இதயத்துல்லா  உள்ளிட்ட நிர்வாகிகளான சசிக்குமார்,ஏழுமலை பொன் சிவா, கோபிநாத், குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.