அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன் பாண்டியன் அறிக்கையில் தெரிவித்தாவது,சுதந்திரப் போராட்ட காலத்திருந்துக் போராடி வருகிற பூர்வக்குடி மக்கள் 68 சாதியினர் DNT என்று சான்றிதழ் வழங்கப்பட்டு இடஒதக்கீடு கொள்கையில் பல்வேறு சலுகைகளை அனுபவித்து வந்த மக்களுக்கு ஒன்றிய அரசிடம் தவறான தகவல்களை அதிகாரிகள் மூலம் அனுப்பி இடையில் சில குளறுபடிகள் செய்து விட்டார்கள்,DNT என்பதை DNC யாக மாற்றி,68 சாதியின மக்களுக்கு இரட்டைச் சான்றிதழ் முறையை உருவாக்கினார்கள்,மீண்டும் எங்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும்,DNT என்று தான் எங்களை அழைக்க வேண்டும் என பூர்வக் குடி மக்களான பிரமலைக் கள்ளர்,கொண்டயன்கோட்டை மறவர் உட்பட 68 சாதியினர் நீண்ட ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்,திராவிட மாடல் முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் அதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு முழுமையாக அதனை ஆராய்ந்து, திராவிட மாடல் என்பது அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்,அனைத்து மக்களும் சமூக நீதி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தமிழ்நாட்டிலே திராவிட மாடல் அரசை மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்தி வருகிறார்கள் , அந்த அடிப்படையில் 2017 முதல் 68சாதியினர் குறிப்பாக தென்மாவட்டத்தில் உசிலம்பட்டி பகுதியில் வாழ்கின்ற பெருபான்மைப் மக்களான பிரமலைக்கள்ளர் சாதியினர் இந்த போராட்டத்தைப் முன்நிறுத்தி தீவிரமாக நடத்தி வருகிறார்கள்,அதனுடைய விளைவாக நேற்றைக்கு நம்முடைய தமிழகத்தினுடைய முதல்வர் திராவிட மாடல் அரசின் பாதுகாவலர்,மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் 68சாதியினருக்கும் இனிமேல் ஒற்றைச் சான்றிதழ் தான் என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்,அதில் சில கயவர்கள் DNCயா ? DNTயா என்று குறிப்பிடவில்லை என்று கூறுகிறார்கள்,மாண்புமிகு முதல்வர் அவர்கள் தெளிவாக மக்களின் கோரிக்கையை ஏற்று DNT சான்றிதழை வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள்,மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு,மக்களுக்கான ஆட்சியை நடத்துகிற முதல்வர் அவர்களுக்கு தெற்குச்சீமை மக்களின் சார்பாக,போராடிய 68சாதியினர் சார்பாக,அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும்,எனது சார்பாகவும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், தேர்தல் ஆணையம் நேற்று மதியத்திற்கு மேல் ஆதிகாரப்பூர்வமாக  தேர்தல் தேதியை அறிவித்து இருக்கிறது,ஆகவே நம்முடைய திராவிட மாடல் அரசு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த அறிவிப்பு நிச்சயமாக, அரசு ஆணையாக விரைவில் வெளிவரும் நம்முடைய மக்களுக்கான இடஒதுக்கீடை மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு வெளியிட்ட முதலமைச்சருக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,போராடிய சீர்மரபினர் நலச்சங்கம் உள்ளிட்ட 68சாதியின கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.