சிந்தாதிரிப்பேட்டை :
அ.இ.அ.தி.மு.க வின் 49 வது தொடக்க விழாவை முன்னிட்டு கழக கொடி ஏற்றுதல் கல்வெட்டுதிறப்பு விழா மற்றும் அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் சிந்தாதிரிப்பேட்டை சர்ச் அருகில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினருமான தி.நகர் சத்தியா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கழக கொடியை ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்.மேலும் பொது மக்களுக்கு அறுசுவை உணவை வழங்கினார்.
62வது வட்ட கழக செயலாளரும், சிந்தாதிரிப்பேட்டை கூட்டுறவு கடன் சங்கத்தின் துணைத் தலைவருமான ஆர்.காமேஷ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் சேப்பாக்கம் பகுதி கழக செயலாளரும். திருவல்லிக்கேணி கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவருமான எம்.கே.சிவா அவர்கள் முன்னிலை வகித்தார். சேப்பாக்கம் பகுதி துணைச் செயலாளரும், சிந்தாதிரிப்பேட்டை கூட்டுறவு கடன் சங்கத்தின் இயக்கு னருமான எஸ்.எஸ்.எஸ்.ராமு வரவேற்புரை ஆற்றினார்.
இறுதியில் 62வது வட்டக் கழக செயலாளரான கே.இளங்கோ மற்றும் 62வது தெற்கு வட்ட துணைச் செயலாளருமான என்.புஷ்பராஜ் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.
மேலும் இந் நிகழ்வில் அதிமுக நிர்வாகிகளான பி. தட்சிணாமூர்த்தி கோவிந்தராஜ் மா. பாண்டியன், பெ.புகழேந்தி, சி.வி.எம் சீனிவாசன் ஜெ.ஏ. சிவசுப்ரமணியன் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த எ.மகாலஷ்மி சேப்பாக்கம் பகுதி மகளிரணி செயலாளர் டி.வண்ணமயில், ஆர். ஜெயந்தி சேப்பாக்கம் பகுதி வட்ட கழக செயலாளர்கள் மற்றும் பிற அணி வட்டக் கழக செயலாளர்கள் திறளாக கலந்து கொண்டனர்.