திருவொற்றியூர் : மே, 27
கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் மற்றும் தொழிலதிபர் கே.கார்த்திக் ஆகியோர் சமூக நோக்குடன் சென்னை திருவொற்றியூர் தொகுதிகுட்பட்ட டோல்கேட் முதல் எண்ணூர் பகுதிகளில் உள்ள வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் இன்னிசை கலைஞர்கள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் முடித்திருத்துவோர் உள்ளிட்ட 600 க்கும் மேற்பட்ட குடும்பகளுக்கு அரிசி ,பருப்பு ஆகியவற்றை திருவொற்றியூர்,ராஜாகடை பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் இ.வேலாயுதம் எஸ்.பி.புகழேந்தி, விம்கோ கே.லெனின், அண்ணா தொழிற்சங்க நகர துணைத் தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன், 4 வது வட்ட இளையஞரணி செயலாளர் பி.ஆர்.ஜி. தினேஷ் குமார் உள்ளிட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
எஸ்.ஏ.ராஜ்குமார் – செய்தியாளர்
(யுகம் நியூஸ்)