நாமக்கல்:தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் நாகை. திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நாமக்கல் மத்திய
மாவட்ட செயலாளர் முனைவர் குமரவேல் மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் வினோத் சேகுவேரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுச் செயலாளர் இளவேனில்,மாநில துணைப் பொதுச் செயலாளர் ராமச்சந்திரன்,மாநில செய்தி தொடர்பாளர் செந்தமிழன்,
மாநில துணை செய்தி தொடர்பாளர் சிந்தனைச் செல்வன்,மாநிலத் துணை அமைப்புச் செயலாளர் ஹிட்டாச்சி சிவா,
மாநில வணிகர் அணி செயலாளர் சண்முகம்,
மாநில துணைக் கொள்கை பரப்புச் செயலாளர் கார்த்திக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் சமூகநீதியை பாதுகாக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளப்பட்டது.
பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்னும் பெயரில் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் அநீதி இழைத்து கூட்டாச்சி தத்துவத்தின் உரிமைகளை பறிக்கும் பாஜக அரசின் செயலை வன்மையாக கண்டிக்கப்பட்டது
தமிழக முதலைமைச்சர் தலைமையில் நடைபெறும் அனைத்துகட்சி கூட்டத்திற்கு தமிழ்ப்புலிகள் கட்சிக்கு அழைப்பு விடுத்தற்கு நன்றி தெரிவித்துகொள்ளப்பட்டது. இந்தியாவிற்கே அரசியல் வழிகாட்டியாக உள்ள தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் மாநில உரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னெடுக்கும் அனைத்து செயல்களுக்கும் தமிழ்ப்புலிகள் கட்சி உறுதுணையாக செயல்படும் என்றும்,தமிழகத்தில் மும்மொழி கொள்கையை நடைமுறைபடுத்தினால் தான் பள்ளி கல்வி துறைக்கு நிதி பங்கீடு வழங்க மறுத்தும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும் வன்மையாக கண்டிக்கிறோம் என்றும்,கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் , கூட்டாச்சி தத்துவத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி பங்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம் எனவும்,
எதிர்வரும் செப் 17 தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் அரசியல் எழுச்சி மாநாடு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நடைபெற உள்ளது.மாநாடு வெற்றியடைய நாமககல் மாவட்டத்திலிருந்து 10000 தோழர்கள் பங்கேற்று மாநாட்டை வெற்றி பெற வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
மேலும் இதில்
மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.